/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெண்ணை நோக்கி கண்ணடித்த கேஷியருக்கு அடி, உதை
/
பெண்ணை நோக்கி கண்ணடித்த கேஷியருக்கு அடி, உதை
ADDED : நவ 17, 2025 01:49 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியில், ஓட்டலுக்கு வந்த பெண்ணை பார்த்து கண்ணடித்து, தவறான செய்கை காட்டிய கேஷியருக்கு சரமாரி அடி, உதை விழுந்தது.
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ள பிரபல உணவு விடுதிக்கு, நேற்று முன்தினம், தந்தை, மகள் சென்றனர். ஓட்டல் கல்லாவில் இருந்த கேஷியர் சிவக்குமார், அந்த பெண், உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது பார்த்து, பாலியல் ரீதியாக தவறான செய்கை செய்ததோடு, கண்ணடித்துள்ளார்.
அங்கிருந்து வெளியேறிய பின், இதை அந்த பெண், தன் தந்தையிடம் கூறினார். தொடர்ந்து, அவரது தந்தை, உறவினர்கள் மீண்டும் ஓட்டலுக்கு வந்து சிவக்குமாரை சரமாரியாக அடித்து, உதைத்தனர்.
ஜங்ஷன் போலீசார் சிவக்குமார் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். சிவக்குமார் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

