/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மின் கம்பங்கள் முறிந்து விழுந்து பசு, கன்று பலி
/
மின் கம்பங்கள் முறிந்து விழுந்து பசு, கன்று பலி
ADDED : அக் 06, 2025 12:49 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
லட்சுமிபுரம் பகுதியில் சூறைக்காற்று வீசியது. இதனால் வயலில் மேய்ந்து கொண்டிருந்த அப்பகுதி ஹரிகிருஷ்ணனின் பசு மற்றும் கன்று மீது மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதில் இரண்டும் சம்பவ இடத்திலேயே பலியாயின. பின் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.
முக்கூடல்-லட்சுமிபுரம் வயல்பகுதிகளில் பல மின்கம்பங்கள் சேதமடைந்தும் சாய்ந்த நிலையிலும் நீண்ட நாட்களாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கால்நடைகள் இறந்துள்ளதாகவும் அதற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தினர்.