/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கடற்கரையில் டால்பின் இறந்து கரை ஒதுங்கியது
/
கடற்கரையில் டால்பின் இறந்து கரை ஒதுங்கியது
ADDED : ஆக 31, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே காரிக்கோவில் கடற்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை மீனவர்கள் கண்டனர். உடனடியாக கடலோர காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசாரும் வனத்துறையினரும் டால்பினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அது எவ்வாறு இறந்தது என்பது குறித்து தெளிவுபடுத்த கால்நடை மருத்துவ நிபுணர்கள் உடற்கூறாய்வு நடத்தினர்.

