/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தகராறில் மனைவி கொலை 'பாசக்கார' கணவன் கைது
/
தகராறில் மனைவி கொலை 'பாசக்கார' கணவன் கைது
ADDED : பிப் 28, 2026 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி சாலை கிருபா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் 30; கட்டட தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 24.
காதலித்து திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளார். தம்பதியிடையே குடும்ப பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த சதீஷ், கயிற்றால் தமிழ்ச்செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பினார். தகவலறிந்த போலீசார், தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு, சதீஷை கைது செய்தனர்.

