/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
உளவுப் பிரிவில் ஜாதி ஆதிக்கம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
/
உளவுப் பிரிவில் ஜாதி ஆதிக்கம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
உளவுப் பிரிவில் ஜாதி ஆதிக்கம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
உளவுப் பிரிவில் ஜாதி ஆதிக்கம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
ADDED : ஆக 10, 2025 01:31 AM
திருநெல்வேலி,:திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது, திருநெல்வேலியில் ஜூலை 27ல் கவின் கொலை செய்யப்பட்டார். அ.தி.மு.க., இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை. பா.ஜ.,வினரும் கவின் வீட்டுக்கு சென்றார்களே தவிர கண்டிக்க தயங்குகின்றனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் அரசு தடுத்திருக்க வேண்டும். கொலையை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கொலைக் குற்றத்தில் குற்றவாளிகளாக சேர்ந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது குறித்து பதிவிட்ட யுடியூபர்கள் மீது மிரட்டல் வருகிறது. நடிகை கஸ்துாரியை மிரட்டுகிறார்கள். தமிழகத்தில் சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க., அரசு களத்திற்கு வரும்போது ஒதுங்கிக் கொள்கிறது. தென் தமிழகத்தில் காவல்துறை ஒருதலைப் பட்சமாக ஜாதி பார்த்து செயல்படுகிறது.
போலீஸ் உளவுப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளில் சில ஜாதியினரை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். வீரம் என்பது வேறு. ரவுடித்தனம் என்பது வேறு. அதிகாரிகள் நேர்மையாக இல்லை. ஆட்சியாளர்கள் சரியாக இல்லை. கவின் படுகொலையை கண்டித்து ஆக.,17ல் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொடர்ந்து ஒன்றியங்கள் தோறும் பேரணிகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.