sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

/

 வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

 வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

 வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது


ADDED : டிச 06, 2025 02:16 AM

Google News

ADDED : டிச 06, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது சாதிக் 28. இவர் சுத்தமல்லி-கோபாலசமுத்திரம் சாலையில் தனது வீட்டின் அருகே பரோட்டா கடை நடத்தி வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார்.

டிச. 2ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள், சாதிக் வீட்டின் மீது சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். மாடிக்கு செல்லும் படிச் சுவரில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சுத்தமல்லி போலீசார் விசாரித்தனர். இதில் ஈடுபட்ட கீழத்தெடியூர் துரை என்ற லட்சுமணன் 21, என்பவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடுகின்றனர். குண்டு வீச்சுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us