ADDED : ஆக 13, 2026 11:28 PM

திருநெல்வேலி: நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் செய்யது பீர் முகமது, 30. பெயின்டர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும், 35 வயது பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. அந்த பெண்ணின், 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்த பீர் முகமது, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே, மலை கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவி, நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் தாய் புகாரில், தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஈரோடு: ஈரோடை சேர்ந்த, 17 வயது இளம்பெண், உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 1 படிக்கிறார். இவரை சில தினங்களுக்கு முன், 24 வயது வாலிபர் கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். இளம்பெண்ணின் உறவினர், ஈரோடு மகளிர் போலீசில் அளித்த புகாரில், போக்சோ, கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார், அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
