/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பீடி இலை கடத்திய வீரருக்கு 'காப்பு'
/
பீடி இலை கடத்திய வீரருக்கு 'காப்பு'
ADDED : ஆக 07, 2025 02:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:இலங்கைக்கு கடத்த இருந்த, பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று அதிகாலை 3:00க்கு, கூடங்குளம் கலங்கரை விளக்கம் அருகே மினிலாரியை சோதனையிட்டபோது, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 3 டன் பீடி இலை பண்டல்கள் இருந்தன. வள்ளியூர், தளபதி சமுத்திரத்தை சேர்ந்த டிரைவர் இசக்கியப்பன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இசக்கியப்பன், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.