sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

திருக்குறுங்குடி கோவிலில் கல்வெட்டுகள் படியெடுப்பு

/

திருக்குறுங்குடி கோவிலில் கல்வெட்டுகள் படியெடுப்பு

திருக்குறுங்குடி கோவிலில் கல்வெட்டுகள் படியெடுப்பு

திருக்குறுங்குடி கோவிலில் கல்வெட்டுகள் படியெடுப்பு

2


ADDED : செப் 20, 2024 01:44 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:44 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஒன்றியத்தில் உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையினர் படியெடுத்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியத்தில், நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், வள்ளியூரிலிருந்து இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது திருக்குறுங்குடி. இங்கு, 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அழகிய நம்பிராயர் என்ற பெயரில் பெருமாள் கோவில் உள்ளது.

திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலத்தை, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் உள்ளிட்டோர் பராமரிக்கவும், வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தவும், பல்வேறு தானங்களை வழங்கி உள்ளனர். அவை குறித்த தகவல்கள், இந்த கோவிலில் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கோவில் தற்போது ஜீயர் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் உள்ள கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் மேற்பார்வையில், பாலமுருகன் உள்ளிட்ட கல்வெட்டு ஆய்வாளர்கள் நேற்று படியெடுக்கும் பணியை துவங்கினர்.

இது குறித்து, பாலமுருகன் கூறியதாவது:

இந்த கோவிலின் கோபுரங்கள், கருவறை, பிரகாரங்கள் உள்ளிட்ட இடங்களில், 13ம் நுாற்றாண்டில் இருந்து தொடர்ச்சியாக பொறிக்கப்பட்ட நிறைய கல்வெட்டுகள் உள்ளன.

மத்திய தொல்லியல் துறை, 1905லும், 1960லும், இந்த ஊர் கோவில்களில் உள்ள 15 கல்வெட்டுகளை படியெடுத்துள்ளது. அவற்றில், இந்த கோவிலைச் சேர்ந்த ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன.

நாங்கள் தற்போது ஆய்வு செய்ததில், பல கல்வெட்டுகள் படியெடுக்காதது தெரியவந்தது. தெற்கு பிரகாரத்தில் இருந்து கல்வெட்டுகளை படியெடுக்க துவங்கி உள்ளோம். முழுமையாக படியெடுத்த பின் தான், கல்வெட்டு தகவல்கள் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருக்குறுங்குடி கல்வெட்டு.






      Dinamalar
      Follow us