/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : ஆக 20, 2024 08:58 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 23 காலை 10:00 மணியளவில் நடக்கிறது.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் மனு அளித்து தீர்வு காணலாம்.
கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, மின்வாரியம், வருவாய் உள்ளிட்ட இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.