ADDED : மே 20, 2024 09:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-கனகம்மாசத்திரம்: சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி செய்தித்தாள்கள் வாகனம் வாயிலாக அனுப்பப்படுகிறது.
நேற்று அதிகாலை திருப்பதிக்கு மாருதி இகோ வாகனத்தில் ஆங்கில செய்தித்தாள்கள் அனுப்பப்பட்டன.
அதிகாலை, 4:30 மணியளவில் சென்னை --திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் அருகே வந்த போது முன் சென்ற லாரியை முந்தியது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

