sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை கட்டடம்

/

ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை கட்டடம்

ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை கட்டடம்

ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை கட்டடம்


ADDED : செப் 04, 2024 02:32 AM

Google News

ADDED : செப் 04, 2024 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது சக்கரமநல்லுார் கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு 2 கி.மீ., துாரத்தில் திருவாலங்காடு அரசு பள்ளி அருகே அமைந்துள்ள ரேஷன் கடையில், பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால், பொருட்களை வாங்கி வர முடியாமல் முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதை தொடர்ந்து, தங்கள் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கடந்தாண்டு திருவள்ளூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், 6 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டது.

கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டான நிலையில், தற்போது வரை ரேஷன் கட்டடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சக்கரமநல்லூர் மக்களின் நலன் கருதி, புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us