/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போஸ்டர் ஒட்டும் இடமான நிழற்குடை
/
போஸ்டர் ஒட்டும் இடமான நிழற்குடை
ADDED : ஆக 21, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருவாலங்காடு பேருந்து நிறுத்தத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பயணியர் மழை வெயிலில் இருந்து பாதுகாப்பாக நிற்க அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி உள்ளது. பயணியர் நிழற்குடை அசுத்தமாக காட்சியளிப்பதால்
பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
நிழற்குடையை போஸ்டரை ஒட்டி அசுத்தம் செய்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.