sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் மர்ம மரணம்

/

காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் மர்ம மரணம்

காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் மர்ம மரணம்

காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் மர்ம மரணம்


ADDED : ஜூலை 31, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமாபுரம்: ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா, 20; பி.ஏ., பட்டதாரி. இவரும், ராமாபுரம் பாரதி சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன், 24, என்பவரும் காதலித்தனர்.

மணிகண்டனுக்கு சிறுநீரகத்தில் கல்லடைப்பு ஏற்பட்டதால், வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் உடனிருந்து மணிகண்டனை ஸ்ரீஜா கவனித்துள்ளார்.

அதன்பின், 29ம் தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டில் ஸ்ரீஜா தங்கி வந்தார். இதையடுத்து, திண்டிவனத்தில் இருந்து மணிகண்டனின் தாய் ரேவதியும் வந்து, மகனுடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீஜாவும் மணிகண்டனும் வெளியே சென்று விட்டு, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீடு திரும்பி உள்ளனர்.

காலை 5:00 மணியளவில் ரேவதி, ஸ்ரீஜா அறைக்கு சென்றபோது, அவர் துப்பட்டாவால் மின் விசிறியில் துாக்கிட்டுதொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின், தாயும் மகனும் சேர்ந்து ஸ்ரீஜாவின் உடலை மீட்டு, ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

ராமாபுரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மணிகண்டன் தன் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து தலைமறைவானார். ஸ்ரீஜா தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் ரேவதியிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us