/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு மருத்துவமனையில் விரைவில் கூடுதல் மருத்துவர்கள்
/
திருத்தணி அரசு மருத்துவமனையில் விரைவில் கூடுதல் மருத்துவர்கள்
திருத்தணி அரசு மருத்துவமனையில் விரைவில் கூடுதல் மருத்துவர்கள்
திருத்தணி அரசு மருத்துவமனையில் விரைவில் கூடுதல் மருத்துவர்கள்
ADDED : மார் 01, 2025 11:55 PM

திருத்தணி, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் சுகாதார துறையின் மாநில இணை இயக்குநர் இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் அம்பிகா ஆகியோர், திருத்தணி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ரத்த பரிசோதனை நிலையம், மருந்தகம், அவசர பிரிவு, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, மக்களை தேடி மருத்துவம், மகப்பேறு அறை, உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, டயாலிசிஸ் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
பின், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேடுகள் ஆய்வு செய்த போது, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ள மனநல மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது.
மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கான, 'பாதம் காக்கும்' திட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை.
அரசு வழங்கிய உபகரணங்களை பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டதற்கு ஊழியர்களை கடுமையாக எச்சரித்தனர்.
அதன்பின், மாவட்ட சுகாதார துறை இயக்குநர் அம்பிகா கூறுகையில், “திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்,” என்றார். உடன், திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் லட்சுமி நரசிம்மன் உடனிருந்தார்.