sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நீர்வரத்து கால்வாயில் சடலங்கள் புதைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்

/

நீர்வரத்து கால்வாயில் சடலங்கள் புதைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்

நீர்வரத்து கால்வாயில் சடலங்கள் புதைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்

நீர்வரத்து கால்வாயில் சடலங்கள் புதைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்


ADDED : ஏப் 04, 2024 08:15 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சி, பி.சி.என்.கண்டிகை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் நலன்கருதி, கிராமம் அருகே தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான, 12 சென்ட் நிலத்தை சுடுகாடு பயன்பாட்டிற்கு தானமாக ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலத்தில் தான் இறந்தவர்களின் உடல்களை புதைத்து சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பி.சி.என்.கண்டிகை சேர்ந்த நரசிம்மன், 90 என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார்.

இவரது உடலை வழக்கமாக புதைக்கும் சுடுகாட்டில் புதைக்காமல் அவரது உறவினர்கள் வேண்டும் என்றே, நீர்வரத்து கால்வாயில் புதைத்தனர். தகவல் அறிந்த திருத்தணி தாசில்தார் மதியழகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் தாசில்தாருக்கும், நரசிம்மன் உறவினர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து தாசில்தார் இனி இறந்தவர்களின் உடல்களை நீர்வரத்து கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் புதைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களுக்கு அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us