/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் மயங்கி விழுந்த முதியவர் பலி
/
திருத்தணியில் மயங்கி விழுந்த முதியவர் பலி
ADDED : ஆக 28, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக, 60 வயது மதிக்தக்க முதியவர் தங்கி வந்தார்.
நேற்று முன்தினம் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த பக்தர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவரின் பெயர் விலாசம் தெரியவில்லை. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.