ADDED : மார் 06, 2025 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி:பொன்னேரி அடுத்த சிறுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன், 42. விவசாயி. இவர் கடந்த, 3ம் தேதி, விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுவிரியன் பாம்பு கடித்தது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
தொடர் சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.