/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோதனை சாவடியில் பகலில் ஒளிரும் விளக்குகள்
/
சோதனை சாவடியில் பகலில் ஒளிரும் விளக்குகள்
ADDED : ஜூலை 15, 2024 01:56 AM

திருவள்ளூர்: திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட குண்டுமேடு பகுதியில், பி - 7 வெள்ளவேடு காவல் நிலைய சோதனைச்சாவடி அமைந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து, கனரக, இலகுரக, இரு சக்கர வாகனம் என, தினமும் 50,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் இரவு மட்டும் ஐந்து பேர் பணி மேற்கொண்டு வாகனங்களை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் போலீசார் பணி மேற்கொள்வதை முன்னிட்டு பகலாக்கும் விதமாக ஏழு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மின் விளக்குகள் பகல் நேரத்தில் எரிந்து மின்சாரம் வீணாகி வருவது இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனைச் சாவடியில் பகலில் ஒளிரும் மின் விளக்குகளை அணைத்து, மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

