sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டிய பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம்

/

குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டிய பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம்

குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டிய பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம்

குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டிய பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஆக 07, 2024 02:43 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,:குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட, ஒன்றாவது வார்டு பகுதியான டோல்கேட், ஐ.சி.எம்.ஆர்., பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

திருவள்ளூர் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு திருப்பாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆழ்துளை கிணறு வாயிலாக, புதை குழாய் வழியாக குடிநீர் எடுத்து வரப்பட்டு, மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பின், குழாய் வழியாக, வீடு, தெரு குழாய்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், டோல்கேட், சி.வி.நாயுடு சாலையில் கலெக்டர் அலுவலக வளாகம் எதிரில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, பள்ளம் தோண்டியது. குழாய் சீரமைத்த இடத்தில், பள்ளத்தை அரைகுறையாக மூடியுள்ளனர்.

சாலை சேதமடைந்ததால், திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதியில் இருந்து திருவள்ளூர் வரும் வாகனங்கள், பள்ளத்தால் கடும் சிரமத்துடன் வருகின்றனர். கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால், சாலையோரம் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், இந்த பள்ளத்தால், அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

எனவே, நகராட்சி நிர்வாகம் சாலையோரம் குடிநீர் குழாய் சீரமைக்க தோண்டிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us