sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'தினமலர்' பட்டம் வினாடி -- வினா போட்டியில் 2வது இடம் பிடித்த மாணவியருக்கு பரிசு வழங்கல்

/

'தினமலர்' பட்டம் வினாடி -- வினா போட்டியில் 2வது இடம் பிடித்த மாணவியருக்கு பரிசு வழங்கல்

'தினமலர்' பட்டம் வினாடி -- வினா போட்டியில் 2வது இடம் பிடித்த மாணவியருக்கு பரிசு வழங்கல்

'தினமலர்' பட்டம் வினாடி -- வினா போட்டியில் 2வது இடம் பிடித்த மாணவியருக்கு பரிசு வழங்கல்


ADDED : பிப் 24, 2025 01:35 AM

Google News

ADDED : பிப் 24, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி சுதந்திரா மேல்நிலைப் பள்ளியின், 49வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.

பள்ளி தாளாளர் சியாமளா ரங்கநாதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைவர் பேராசிரியர் ரங்கநாதன் வரவேற்று பேசினார். முதல்வர் துரைகுப்பன் ஆண்டறிக்கை வாசித்தார்.

இதில், சிறப்பு விருந்தினர்களாக புலவர் சண்முகவடிவேல், திருத்தணி மூத்த வழக்கறிஞர் சந்தியாராணி ஆகியோர் பங்கேற்று, பள்ளி தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கி பாராட்டினர்.

மேலும், விழாவில், 'தினமலர்' பட்டம் இதழ் சார்பில், சென்னையில் நடந்த வினாடி - வினா இறுதி போட்டியில், மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்ற சுதந்திரா பள்ளி மாணவியர் சான்வி, ரிஷிதபிரியா ஆகியோருக்கு, தலா, 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும், 'தினமலர்' சார்பில் வழங்கிய 'லேப்டாப்' வழங்கி, சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்.

இதுதவிர கடந்தாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர் சப்யூல்ரஹீம், பிளஸ் 2 தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவி ஷாலினி ஆகியோருக்கு, தலா, 2,500 ரூபாய் மற்றும் பதக்கம் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், பெற்றோர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் கேசவன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us