/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடி - திருவள்ளூர் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
ஆவடி - திருவள்ளூர் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ஆவடி - திருவள்ளூர் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ஆவடி - திருவள்ளூர் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : செப் 02, 2024 10:58 PM
ஆவடி: ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு, தடம் எண்: 572 அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இப்பேருந்து, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை வழியாக திருவள்ளூர் செல்வதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், இந்த பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2019 வரை, இந்த வழித்தடத்தில் 11 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒவ்வொரு பேருந்தும் நாள் ஒன்றுக்கு 12 நடைகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், பட்டாபிராமில் நடந்து வரும் மேம்பால பணிக்காக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. வாகனங்கள் அனைத்தும் பட்டாபிராம், தண்டுரை, வண்டலுார் --- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக இயக்கப்படுகின்றன. தேவையின்றி 14 கி.மீ., சுற்றி செல்வதால், பெரும்பாலான பயணியர், திருநின்றவூர் அல்லது பட்டாபிராமில் இறங்கி ரயில்களில் செல்ல துவங்கினர்.
இதனால், பயணியர் எண்ணிக்கை குறைந்து, வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது நான்கு பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.
நான்கு டீலக்ஸ் பேருந்து, இரண்டு சாதாரண பேருந்து மற்றும் ஒரு இரவு ஆல்ட் பேருந்து என, ஏழு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், 12 நடைகள் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், 10 நடையாக குறைக்கப்பட்டுள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட ஆவடி போக்குவரத்து துறை அதிகாரிகள், இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.