/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
/
சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
ADDED : ஜூலை 03, 2024 09:41 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் வருவாய் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் உள்ள ஆரணி சார் - பதிவகத்தில் உள்ள இருளிப்பட்டு குக்கிராமத்தை, திருவள்ளூர் பதிவு மாவட்டம், பொன்னேரி சார் - பதிவகத்தில் உள்ள முதன்மை கிராமமான ஜகனாதபுரத்துடன் இணைக்கப்பட உள்ளது.
இந்த இணைப்பு குறித்து ஜகனாதபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் கருத்து கேட்கும் கூட்டம், வரும் 10ம் தேதி பகல் 11:00 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராமவாசிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.