sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தம்

/

ஆரம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தம்

ஆரம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தம்

ஆரம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தம்


ADDED : ஜூன் 12, 2024 02:22 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களை போலீசார் முறைப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லை முடிந்து தமிழக எல்லை துவங்கும் இடத்தில் ஆரம்பாக்கம் பகுதி உள்ளது.

தமிழக எல்லை துவங்கும் இடத்தில் போலீசாரின் சோதனைச்சாவடி உள்ளது. அதனை கடந்ததும், சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. ஆட்டோ ஸ்டாண்ட் போல் தேசிய நெடுஞ்சாலை மாறியதால், தமிழக எல்லை துவங்கும் இடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

ஆரம்பாக்கம் பஜார் பகுதியை நடைபாதை கடைகள் ஆக்கிரமித்ததால், தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை கருதி,ஷேர் ஆட்டோக்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கி, ஆரம்பாக்கம் போலீசார் முறைப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us