sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமழிசையில் பொங்கிய கழிவுநீர் துாங்கிய அதிகாரிகளால் அவதி

/

திருமழிசையில் பொங்கிய கழிவுநீர் துாங்கிய அதிகாரிகளால் அவதி

திருமழிசையில் பொங்கிய கழிவுநீர் துாங்கிய அதிகாரிகளால் அவதி

திருமழிசையில் பொங்கிய கழிவுநீர் துாங்கிய அதிகாரிகளால் அவதி


ADDED : ஆக 14, 2024 11:13 PM

Google News

ADDED : ஆக 14, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

​திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 40.60 கோடி ரூபாய் செலவில், 2007ல் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் துவக்கப்பட்டு, 2019ம் ஆண்டு நிறைவடைந்தது.

ஐந்தாண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை பாதாள சாக்கடை பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.

இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஜவகர் தெருவில், பாதாள சாக்கடை அடைப்பு குறித்து பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us