/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் சேதமடைந்த தரைப்பாலம் ரூ.1.32 கோடி ஒதுக்கியும் பயனில்லை
/
கும்மிடியில் சேதமடைந்த தரைப்பாலம் ரூ.1.32 கோடி ஒதுக்கியும் பயனில்லை
கும்மிடியில் சேதமடைந்த தரைப்பாலம் ரூ.1.32 கோடி ஒதுக்கியும் பயனில்லை
கும்மிடியில் சேதமடைந்த தரைப்பாலம் ரூ.1.32 கோடி ஒதுக்கியும் பயனில்லை
ADDED : மார் 01, 2025 11:54 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, மேட்டுத் தெரு செல்லும் சாலையின் குறுக்கே, ஏரிகளின் உபரிநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மழைக்காலங்களிலும், மழை வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்குவதும், மூன்று நாட்கள் போக்குவரத்து பாதிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்தாண்டு கனமழையின் போது, அந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த இடத்தில், மணல் மூட்டைகள் வைத்து தரைப்பாலம் இணைக்கப்பட்டது. இருப்பினும், அப்பகுதியை கடக்கும் பகுதிவாசிகளும், பள்ளி மாணவர்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
உடனடியாக, தரைப்பாலத்தை இடித்து, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து மேட்டு தெரு, தபால் தெரு வழியாக, ஜி.என்.டி., சாலை வரையிலான சாலையை புதுப்பித்து, தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற, கடந்த நவம்பர் மாத இறுதியில், 1.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதுவரை கட்டுமான பணி துவங்கபடாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
உயர்மட்ட பாலத்திற்கான 'டெண்டர்' விடும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும்.
பேரூராட்சி அலுவலர்,
கும்மிடிப்பூண்டி.