sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒருமையில் பேசிய கலெக்டரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

/

ஒருமையில் பேசிய கலெக்டரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

ஒருமையில் பேசிய கலெக்டரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

ஒருமையில் பேசிய கலெக்டரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்


ADDED : ஜூலை 02, 2024 07:04 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கடந்த 29ம் தேதி, அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள 24 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை ஆசிரியர்கள் என சுமார் 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து விவாதிக்கப்பட்டு குறைவான தேர்ச்சி சதவீதம் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனையை கலெக்டர் வழங்கினார்.

அப்போது கலெக்டர் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஒருமையில் பேசியுள்ளார்.

தொடர்ந்து 'என்னை ஒன்றும் செய்ய முடியாது, ஜாக்டோ - ஜியோ அமைப்பில் கூறுங்கள், அமைச்சரிடம் கூறுங்கள், அதிகபட்சமாக என்னை இடமாற்றம் செய்வார்கள் நான் மாறுதல் பெற தயாராக உள்ளேன்' என கூறியுள்ளார்.

இதையடுத்து கலெக்டரை கண்டிக்கும் வகையில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஆசிரியர்கள் திருவள்ளூர் மாவட்டம் முழுதும் நேற்று முதல் வரும் 5ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணி மேற்கொள்ளுவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து பணி செய்தனர்.

ஆசிரியர்கள் போராட்டம் வலுப்பெற்றால் மாணவ, மாணவியரின் கல்வி பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆசிரியர்களை அழைத்து பேசி பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us