ADDED : ஆக 17, 2024 07:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் மனைவி அன்னபூரணி, 70. இவர் கடந்த சில மாதங்களாக திருத்தணி புறா கோவில் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில் இருந்து வெளியே வந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.