/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூட்டை உடைத்து 6 சவரன் திருட்டு
/
பூட்டை உடைத்து 6 சவரன் திருட்டு
ADDED : செப் 13, 2024 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம், காந்தி நகரை சேர்ந்தவர் மதினா, 43. அங்கன்வாடி ஊழியர். நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த, ஆறு சவரன் நகை, 7,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.