sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போக்குவரத்துக்கு லாயகற்ற திருவள்ளூர் சாலை : வாகன ஓட்டிகள் 'திக் திக்' பயணம்

/

போக்குவரத்துக்கு லாயகற்ற திருவள்ளூர் சாலை : வாகன ஓட்டிகள் 'திக் திக்' பயணம்

போக்குவரத்துக்கு லாயகற்ற திருவள்ளூர் சாலை : வாகன ஓட்டிகள் 'திக் திக்' பயணம்

போக்குவரத்துக்கு லாயகற்ற திருவள்ளூர் சாலை : வாகன ஓட்டிகள் 'திக் திக்' பயணம்


ADDED : மார் 07, 2025 02:18 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது தொடுகாடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியே தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் நடந்து வந்த பாதாள சாக்கடை பணிகளால் இந்த நெடுஞ்சாலையில் தொடுகாடு அடுத்த கிளாய் சாலை சந்திப்பு முதல் ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை வரை பல இடங்களில் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

ஸ்ரீபெரும்புதுாரில் நடந்து வந்த பாதாள சாக்கடை பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' மூடி சேதமடைந்து மரணகுழிகளாக மாறியுள்ளது. இப்பகுதியில் காவல்துறை சார்பில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவசர மருத்துவ தேவைக்கு இவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்வதில் கூட கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் பாதாள சாக்கடை மேன்ேஹால் பகுதியைச் சீமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us