sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்

/

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்


ADDED : மே 23, 2024 12:27 AM

Google News

ADDED : மே 23, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை, கடம்பத்துார் - பேரம்பாக்கம், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் வழியாக, சரக்கு வாகனங்களில் பகுதிவாசிகள் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வேலைக்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்லும் பகுதிவாசிகள் என, அனைவரும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு செல்வதற்கு சரக்கு வாகனங்களையே பயன் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சில வாகனங்களில் ஏற்றப்பட்ட பொருட்களின் மேல் பகுதியில் அமர்ந்து, ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர்.

ஆங்காங்கே, வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரும், இவர்களை கண்டுகொள்ளாததே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனவே, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us