sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளி நேரத்தில் மண் எடுத்து சென்ற லாரி சிறைபிடிப்பு

/

பள்ளி நேரத்தில் மண் எடுத்து சென்ற லாரி சிறைபிடிப்பு

பள்ளி நேரத்தில் மண் எடுத்து சென்ற லாரி சிறைபிடிப்பு

பள்ளி நேரத்தில் மண் எடுத்து சென்ற லாரி சிறைபிடிப்பு


ADDED : பிப் 21, 2025 10:25 PM

Google News

ADDED : பிப் 21, 2025 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெமிலி,:நெமிலி அருகே, சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை விரிவாக்க பணிக்கு, பள்ளி நேரங்களில் லாரிகளில் மண் எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக பனப்பாக்கம் அடுத்து ஆலப்பாக்கத்தில் இருந்து, லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுகிறது.

இவ்வாறு மண் எடுத்து செல்லும் லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலையில் துாசு மற்றும் மண் பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த நெடும்புலி கிராம மக்கள், மண் ஏற்றிச் சென்ற, 15 லாரிகளை நேற்று காலை 9:00 மணியளவில் சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். நெமிலி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, 'பள்ளி நேரங்களில் லாரிகள் இயக்கப்படாது' என கூறி, மறியலை கைவிட செய்தனர்.






      Dinamalar
      Follow us