/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பரிதாப நிலையில் காட்சியளிக்கும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்
/
பரிதாப நிலையில் காட்சியளிக்கும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்
பரிதாப நிலையில் காட்சியளிக்கும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்
பரிதாப நிலையில் காட்சியளிக்கும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்
ADDED : ஏப் 17, 2024 11:27 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி அருகே, வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அமைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம், தற்போது கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்து, அவ்வப்போது சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகின்றன.
மேலும், கட்டடத்தின் வெளிப்புற துாண்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சான்றிதழ், நிலம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சேவைகளை பெற வருவோர், அலுவலகத்திற்குள் வர அச்சப்படுகின்றனர்.
கிராமத்தின் வருவாய் ஆவணங்கள் மற்றும் மக்களுக்கான சேவையை வழங்கும் கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதால், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
எனவே, சேதமடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை சீரமைக்க, வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

