sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விதிமீறி மண் அள்ள கிராமவாசிகள் எதிர்ப்பு

/

விதிமீறி மண் அள்ள கிராமவாசிகள் எதிர்ப்பு

விதிமீறி மண் அள்ள கிராமவாசிகள் எதிர்ப்பு

விதிமீறி மண் அள்ள கிராமவாசிகள் எதிர்ப்பு


ADDED : மார் 11, 2025 12:06 AM

Google News

ADDED : மார் 11, 2025 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகளுக்கு கலெக்டரிடம் அனுமதி பெற்று, திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே உள்ளபட்டாபிராமபுரம் ஊராட்சி ஏரியில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாகஏரியில் மண் எடுத்து, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி களுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், நேற்று பட்டாபிராமபுரம் ஊராட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், விதிமுறைகளை மீறி அதிக ஆழம் தோண்டி மண் எடுப்பதாகக் கூறி, மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.

அப்போது கிராமவாசிகள், 'அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்' என்றனர்.

இதை தொடர்ந்து,தற்காலிகமாக ஏரியில்மண் எடுப்பது நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us