sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஞாயிறு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வார்டு உறுப்பினர்கள் போராட்டம்

/

ஞாயிறு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வார்டு உறுப்பினர்கள் போராட்டம்

ஞாயிறு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வார்டு உறுப்பினர்கள் போராட்டம்

ஞாயிறு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வார்டு உறுப்பினர்கள் போராட்டம்


ADDED : மே 14, 2024 10:59 PM

Google News

ADDED : மே 14, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்,:சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட ஞாயிறு, பசுவன்பாளையம், புதுகுப்பம் கிராமங்களில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை.

கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராமவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறி, நேற்று ஞாயிறு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சதிஷ்குமார், கலா, மனோன்மணி சாரங்கன் ஆகியோர் சோழவரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.டி.ஓ., அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். வார்டு உறுப்பினர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர்.

இது குறித்து வார்டு உறுப்பினர் சதிஷ்குமார் கூறியதாவது:

ஞாயிறு ஊராட்சியில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 1.19 கோடி ரூபாயில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள், பைப்லைன் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேல்நிலை தொட்டிகள் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளன. ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர், சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us