sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று மின்சார ரயில் சேவை ரத்து :150 கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு

/

இன்று மின்சார ரயில் சேவை ரத்து :150 கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு

இன்று மின்சார ரயில் சேவை ரத்து :150 கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு

இன்று மின்சார ரயில் சேவை ரத்து :150 கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு


ADDED : பிப் 25, 2024 02:28 AM

Google News

ADDED : பிப் 25, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடங்களில் இன்று கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்,'' என, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டத்தில், கோடம்பாக்கம் - தாம்பரம் வழித்தடத்தில் ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:05 மணி முதல் மாலை 3:15 மணி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே, பயணியரின் வசதிக்காக மேற்கண்ட வழித்தடங்களை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகளை இயக்க வேண்டுமென சென்னை கோட்டம், மாநகர போக்குவரத்து கழகத்தை தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டது.

இதற்கிடையே, சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில்பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகின்றன. எனவே, மேற்கண்ட வழித்தடத்தில் தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்.

காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை கூடுதலாக இந்த பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய நிலையங்களில் அதிகாரிகள் நியமித்து, பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10 ரயில்கள் நீட்டிப்பு


பயணியரின் நெரிசலை கருத்தில் வைத்து, சென்னை கடற்கரை - தாம்பரம் 10 மின்சார ரயில்கள், நாளை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன.

இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பின், வண்டலுார் - ஊரப்பாக்கம் இடையே பயணியரின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால், மின்சார ரயில்களின் சேவை, நாளை முதல் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.

வார நாட்களில்நீட்டிப்பு:

l சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு 7:19, 8:15, 8:45, 8:55, 9:40 மணி மின்சார ரயில்கள், நாளை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன

l கூடுவாஞ்சேரி - தாம்பரத்துக்கு இரவு 8:55, 9:45, 10:10, 10:25, 11:20 மணிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும்

ஞாயிறுகளில் நீட்டிப்பு

l சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு 7:20, 8:20, 8:40, 9:00, 9:50 மணி ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்படும்

l கூடுவாஞ்சேரி - தாம்பரம் இரவு 8:55, 9:50, 10:10, 10:35, 11:20 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us