sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆவடியில் 18 மாடுகள் சிறைபிடிப்பு

/

ஆவடியில் 18 மாடுகள் சிறைபிடிப்பு

ஆவடியில் 18 மாடுகள் சிறைபிடிப்பு

ஆவடியில் 18 மாடுகள் சிறைபிடிப்பு


ADDED : நவ 10, 2025 11:01 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதிகளில், சாலையில் திரிந்த 18 மாடுகள் நேற்று சிறைபிடிக்கப்பட்டன. ஆவடி மாநகராட்சியில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

இது குறித்து, மாடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சாலையில் மாடுகள் மேய்ந்து வருவது குறையவில்லை.

தற்போது, கடந்த மே முதல், தனியார் அமைப்புடன் சேர்ந்து மாடு பிடிக்கும் பணியை, ஆவடி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று அதிகாலை, தண்டுரை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நேரு பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் சுற்றித்திரிந்த, 18 மாடுகள் பிடிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள மாடுகளை பராமரிக்கும் இடமான கோ சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த ஆண்டு, இதுவரை, 155 மாடுகள் பிடிக்கப்பட்டு, 3.68 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us