/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
18ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
18ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : அக் 17, 2024 12:04 AM
திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள்நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 18ல்நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில், வரும் 18 காலை 10:00 மணியளவில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு;மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண அந்தந்த வருவாய் கோட்டங்களில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.