/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
4 வயது சிறுமியை சீரழித்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை
/
4 வயது சிறுமியை சீரழித்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை
4 வயது சிறுமியை சீரழித்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை
4 வயது சிறுமியை சீரழித்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை
ADDED : அக் 31, 2025 01:03 AM

திருவள்ளூர்:  திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் நயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், 29. இவர், 2018 ஜனவரி 18ல், அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை அருகிலிருந்த வீட்டு மாடிக்கு துாக்கி சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனர்.
திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி உமாமகேஸ்வரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கடத்தல், பாலியல் வன்கொடுமை, மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், யுவராஜ்க்கு, 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் தமிழக அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.

