/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இ.சி.ஆரில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
/
இ.சி.ஆரில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 25, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தமிழகத்தில் நடக்கும் 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு போட்டியின் ஒரு பகுதியாக, இன்று முதல் 28ம் தேதி வரை, அதிகாலை 5:00 மணி முதல் 12:00 மணி வரை, கிழக்கு கடற்கரை சாலையில், சைக்கிளத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.
அதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள், போக்குவரத்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என, தாம்பரம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

