/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்
/
மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்
ADDED : மார் 15, 2025 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள போந்தவாக்கத்தில், நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த மூன்று டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
அதன் ஓட்டுனர்களான ஆந்திர மாநிலம், வரதய்யாபாளையம் வெங்கடேசன், 42, காளஹஸ்தி பாலகிருஷ்ணன், 35, சுதீர், 21, ஆகிய மூவரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.