sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆதரவற்ற பெண்கள் தொழில் துவங்க 50 சதவீதம் மானியம்

/

ஆதரவற்ற பெண்கள் தொழில் துவங்க 50 சதவீதம் மானியம்

ஆதரவற்ற பெண்கள் தொழில் துவங்க 50 சதவீதம் மானியம்

ஆதரவற்ற பெண்கள் தொழில் துவங்க 50 சதவீதம் மானியம்


ADDED : ஜூன் 25, 2025 02:41 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:ஆதரவற்ற மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பெண்கள், மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நடப்பு 2025 - -26ம் நிதியாண்டில், 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரம் வாங்கும்போது, அதன் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை மானிய தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை ஜூலை 14ம் தேதிக்குள், கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை 044 - 2989 6049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us