sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தாறுமாறாக வேனை ஓட்டிய கிளீனர் காவலாளி, டிரைவர் சிக்கி பரிதாப பலி

/

தாறுமாறாக வேனை ஓட்டிய கிளீனர் காவலாளி, டிரைவர் சிக்கி பரிதாப பலி

தாறுமாறாக வேனை ஓட்டிய கிளீனர் காவலாளி, டிரைவர் சிக்கி பரிதாப பலி

தாறுமாறாக வேனை ஓட்டிய கிளீனர் காவலாளி, டிரைவர் சிக்கி பரிதாப பலி


ADDED : ஜூலை 11, 2025 09:42 PM

Google News

ADDED : ஜூலை 11, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சோழவரம் அருகே, பொலிரோ வேனை கிளீனர் தவறுதலாக இயக்கியதில், அதன் டிரைவர் மற்றும் தனியார் நிறுவன காவலாளி பலியாகினர்.

சோழவரம் அடுத்த ஒரக்காடு அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 50. இவர், ஒரக்காடு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, நிறுவனத்தின் நுழைவு வாயிலில் இவர் பணியில் இருந்த போது, கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த 'பொலிரோ' வேன் ஒன்று வந்துள்ளது. வாகனத்தை, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சென்னிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி, 23, என்பவர் ஓட்டி வந்தார்.

சோழவரம் அடுத்த பழைய எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரூபன், 18, என்பவர், கிளீனராக இருந்தார்.

நுழைவு வாயிலுக்கு முன் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்ற கருப்பசாமி, பணியில் இருந்த காவலாளி பிரபுவிடம் ஆவணங்களைக் காட்ட, அவர் 'கேட்'டின் ஒரு பகுதியை திறந்தார்.

அப்போது, பொலிரோ வாகனத்தில் அமர்ந்திருந்த கிளீனர் ரூபன், திடீரென வாகனத்தை இயக்கினார்.

இதில், வாகனம் கட்டுப்பாடின்றி நுழைவு வாயிலை கடந்து, அங்கு நின்றிருந்த டிரைவர் கருப்பசாமி மற்றும் காவலாளி பிரபு மீது மோதியதுடன், கட்டடத்தின் சுவரில் மோதி நின்றது.

இதில் கருப்பசாமியும் பிரபுவும் வாகனத்திற்கும், கட்டடத்திற்கும் இடையே சிக்கி பலத்த காயமடைந்தனர்.உடனே, அங்கிருந்தோர் சேர்ந்து வேனை கவிழ்த்து, அவர்களை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சோழவரம் போலீசார், இருவரது உடல்களையும் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து, வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ரூபனை கைது செய்தனர்.

இந்நிலையில், விபத்தில் இறந்த காவலாளி பிரபுவின் உறவினர்கள், இழப்பீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us