sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஜெ.ஜெ.கார்டனில் அரைகுறையாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்

/

ஜெ.ஜெ.கார்டனில் அரைகுறையாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்

ஜெ.ஜெ.கார்டனில் அரைகுறையாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்

ஜெ.ஜெ.கார்டனில் அரைகுறையாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்


ADDED : ஜூலை 26, 2025 02:24 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதியில், அரைகுறையாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயால், சிறுவானுார்கண்டிகை பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார்கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகே அமைந்துள்ள இந்நகரில், 500க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடிபெயர்ந்துள்ளனர். மேலும், பல வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த நகரில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை. இரண்டு இடங்களில் தொட்டி அமைத்தும், தற்போது வரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.

சாலை வசதி இல்லாததால், மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி, நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் ஓராண்டுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாமல், அரைகுறையாக கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

எனவே, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள், மழைநீர் கால்வாயை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என, திருவள்ளூர் கலெக்டருக்கு குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us