/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரிபுராந்தக சுவாமி கோவிலில் 19ல் ஆடிப்பூர பிரம்மோத்சவம்
/
திரிபுராந்தக சுவாமி கோவிலில் 19ல் ஆடிப்பூர பிரம்மோத்சவம்
திரிபுராந்தக சுவாமி கோவிலில் 19ல் ஆடிப்பூர பிரம்மோத்சவம்
திரிபுராந்தக சுவாமி கோவிலில் 19ல் ஆடிப்பூர பிரம்மோத்சவம்
ADDED : ஜூலை 11, 2025 09:46 PM
கூவம்:கூவம் ஊராட்சியில் உள்ள திரிபுராந்தக சுவாமி கோவிலில், வரும் 19ம் தேதி ஆடிப்பூர பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சியில், திரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில், ஆடிப்பூர பிரம்மோத்சவ திருவிழா, வரும் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள், கொடியேற்றம் நடைபெறும். திருவிழா காலங்களில் தினமும் காலை 7:00 மணிக்கு லட்சுமி, சரஸ்வதி, துர்கா சுவாமிகள், பவழக்கால் சப்பரத்திலும், இரவு 7:00 மணிக்கு திரிபுர சுந்தரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 25ம் தேதி காலை 8:30 மணிக்கு மேல் நடைபெறும்.
வரும் 29ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என, ஹிந்து சமய அறநிலைய துறையினர் தெரிவித்துள்ளனர்.