/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடியில் குழந்தைகள் சேர்க்கை
/
அங்கன்வாடியில் குழந்தைகள் சேர்க்கை
ADDED : மே 24, 2025 08:08 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், நடப்பாண்டிற்கான குழந்தைகள் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், 1,757 குழந்தை மையங்கள் உள்ளன. இங்கு, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது.
குறிப்பாக, 2 - 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முறைசாரா முன்பருவக் கல்வி செய்கை பாடல், கதை, விளையாட்டு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் வாயிலாக அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில், குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை, 'ஆடிப்பாடி விளையாடு பாப்பா' எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன், 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தற்போது அங்கன்வாடி பணியாளர்கள், வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்களது 2 - 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, ஜுன் மாதத்திற்குள் சேர்க்க வேண்டும்.
மேலும், குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால், அச்சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.