ADDED : நவ 20, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் கிராமத்தில், மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு, வீட்டின் அருகே மது விற்பனை செய்த மணிகண்டன், 31, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 28 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.