sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஆண்டார்மடத்தில் ஆற்று மணல் திருட்டு இரவில் சமூக விரோதிகள் அட்டூழியம்

/

 ஆண்டார்மடத்தில் ஆற்று மணல் திருட்டு இரவில் சமூக விரோதிகள் அட்டூழியம்

 ஆண்டார்மடத்தில் ஆற்று மணல் திருட்டு இரவில் சமூக விரோதிகள் அட்டூழியம்

 ஆண்டார்மடத்தில் ஆற்று மணல் திருட்டு இரவில் சமூக விரோதிகள் அட்டூழியம்


ADDED : டிச 27, 2025 06:11 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் திருட்டில் ஈடுபடுவதால், அங்குள்ள கனிமளம் சூறையாடப்பட்டு வருகிறது.

பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தின் வழியாக ஆரணி ஆறு பயணித்து, பழவேற்காடு கடலில் முடிவடைகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆண்டார்மடம் கிராமத்திலும், ஆற்றுநீர் ஆர்ப்பரித்து சென்றது. தற்போது, ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட ஆற்று மணல், ஆண்டார்மடம் பகுதியில் குவிந்திருக்கிறது. இதை, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் டிராக்டர்கள் மூலம் கடத்தி, வெளியிடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், அருகே உள்ள தடுப்பணைக்கு ஆபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கனிமளம் சூறையாடப்பட்டு வருவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, ஆண்டார்மடம் கிராமத்தில் ஆற்று மணல் திருட்டை தடுக்க, காவல், வருவாய் மற்றும் நீர்வள துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us