sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிலத்தகராறில் இருதரப்பு மோதல் 11 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

/

நிலத்தகராறில் இருதரப்பு மோதல் 11 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

நிலத்தகராறில் இருதரப்பு மோதல் 11 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

நிலத்தகராறில் இருதரப்பு மோதல் 11 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது


ADDED : செப் 06, 2025 11:39 PM

Google News

ADDED : செப் 06, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அருகே நிலத்தகராறு காரணமாக, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, 11 பேர் மீது வழக்கு பதிந்து, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார், 40. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அன்பழகன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 4ம் தேதி இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கட்டை மற்றும் கல்லால் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதில், 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று அய்யப்பன், செங்குட்டுவன், சசிகுமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us