sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கலெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்த தாய், மகன் மீது வழக்கு

/

கலெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்த தாய், மகன் மீது வழக்கு

கலெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்த தாய், மகன் மீது வழக்கு

கலெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்த தாய், மகன் மீது வழக்கு


ADDED : பிப் 22, 2024 10:59 PM

Google News

ADDED : பிப் 22, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு தாலுகாவில், கலெக்டர் பிரபுசங்கர், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் பள்ளிப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த பகுதியைச் சேர்ந்த அமராவதி, 73, மற்றும் அவரது மகன் ஹேமாத்ரி, 43, ஆகியோர், கலெக்டரை வழிமறித்து பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

பள்ளி மாணவர்கள் செல்லும் வழி குறித்து இவர்கள், கலெக்டரிடம் வாதிட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட இடம், தங்களுக்கு உரியது எனவும், அதற்கான ஆவணங்கள் உள்ளது எனவும் கலெக்டர் பிரபுசங்கரிடம் தொடர்ந்து வாதம் செய்தனர். உரிய ஆவணங்களை, முறைப்படி வருவாய்த் துறையினரிடம் சமர்ப்பிக்க, கலெக்டர் அறிவுறுத்தியும் அவர்கள், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து புதுப்பட்டு வி.ஏ.ஓ., தீபா, கலெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அமராவதி மற்றம் ஹேமாத்ரி ஆகியோர் மீது பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us